செவ்வாய், 18 நவம்பர், 2008

`மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் தயாரிப்பாளரை கண்கலங்க வைத்த `கிளைமாக்ஸ்'


`பிடிச்சிருக்கு' படத்தை தயாரித்த கூல் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரித்துள்ள படம், `மகேஷ் சரண்யா மற்றும் பலர்.' இந்த படத்தில் சக்தி (டைரக்டர் பி.வாசுவின் மகன்), கீர்த்தி சாவ்லா, சரண்யா மோகன் கதாநாயகன்-கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் சந்தானம், `கல்யாணமாலை' மோகன், வினோதினி, மோகனப்ரியா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்பவர், பி.வி.ரவி. இவர், டைரக்டர் லிங்குசாமியிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.
கதைப்படி சக்தி, ஒரு கல்லூரி மாணவர். சந்தியா, கல்லூரி மாணவி. இருவருக்கும் இடையேயான கவித்துவமான காதலை, கதை சித்தரிக்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலும், கும்பகோணம் ரெயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை பார்த்த தயாரிப்பாளர் சித.செண்பககுமார் கண்கலங்கி, டைரக்டர் ரவியை கட்டிப்பிடித்து பாராட்டினார். அதோடு தனது அன்பு பரிசாக 10 பவுன் சங்கிலியை டைரக்டர் ரவியின் கழுத்தில் அணிவித்தார்
.

கருத்துகள் இல்லை: