சனி, 22 நவம்பர், 2008

படங்கள் தோல்வி அடைந்தால் நடிகைகள் மீது பழி சுமத்துகிறார்கள்-தமன்னா


தமிழ்- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உலா வருப வர் தமன்னா. இவர் ஐதரா பாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பின் போது நிரு பர்களிடம் கூறியதாவது:-
சினிமாவில் பெரும்பா லும் நடிகைகளுக்கு ஆவ்வள வாக முக்கியத்துவம் இருப்ப தில்லை. ஒரு சில படங் களில்தான் ஓரளவு முக்கி யத்துவம் தருகிறார்கள்.
சில படங்களில் நாயகி 3 பாடலுக்கு நடனம், ஏழெட்டு காட்சிகளில் மட்டும்தான் தோன்றுவார். அந்த படம் வெற்றி பெற்றால் நடிகர் களுக்கு புகழ் சென்று விடு கிறது.
ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தால் அதில் நடித்த நடிகையால்தான் தோல்வி அடைந்து விட்டது என்று வீண் பழி போடு கிறார்கள்.
இந்த வீண் பழியால் எத் தனையோ புதுமுக நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
என்னைப் பொறுத்த வரையில் ஓரளவு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தான் நடிக்கிறேன். நல்ல கதையை தேர்வு செய்து நடித்தால்தான் மார்க்கெட்டை தக்க வைக்க முடியும். "எனக்கு நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவருக்கு அடிக்கடி போன் செய்து நடிப்பு பற்றி கற்றுக் கொள்கிறேன். சந்திரமுகி, மொழி படங்களை பார்த்ததில் இருந்து நான் ஜோதிகாவின் தீவிர ரசிகை ஆகிவிட்டேன். தற்போது நான் தமிழில் 6 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.
அதிக விபரங்களுக்கு "கனவு தொழிற்சாலை" பார்க்கவும்.

கருத்துகள் இல்லை: