திரைப்படச் செய்திகள் அறிய கீழே "க்ளிக்" செய்யவும்
Kanavu Thozhil Salai-Tamil Cinema Fortnightly Magazine
புதன், 11 மார்ச், 2009
புதன், 11 பிப்ரவரி, 2009
லாரா தத்தாவின் கவர்ச்சி போஸ்
நடிகை லாரா தத்தா கவர்ச்சி போஸ் கொடுத்து அசத்தியிருக்கும் விவகாரம்தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்! மேக்ஸிம் என்ற பேஷன் இதழின் அட்டையில் இடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், அமீஷா பட்டில், ஸ்ரேயா உள்ளிட்டவர்களை தொடர்ந்து லாரா தத்தா மேக்ஸிமில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது பில்லு பார்பர் படத்தில் நடித்து வரும் லாரா, மேக்ஸிம் இதழுக்காக கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். பிப்ரவரி மாத இதழ் அட்டை மற்றும் உள் பக்கங்களில் லாராவின் கவர்ச்சி தோற்றம் பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009
ஷாம்லி தெலுங்கில், கதாநாயகி ஆனார்!
செவ்வாய், 13 ஜனவரி, 2009
"சற்றுமுன் கிடைத்த தகவல்" - 75 சதவீத படம் முடிவடைந்தபின் டைரக்டர் மாற்றப்பட்டார்!
250 படங்களுக்கும் மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த கனல் கண்ணன் கதையின் நாயகனாக, மனநோயாளி வேடத்தில் நடிக்கும் படம், "சற்றுமுன் கிடைத்த தகவல்". இந்த படத்தை முதலில் தக்காளி சீனிவாசன் டைரக்டு செய்தார். 75 சதவீத படம் முடிவடைந்த நிலையில், இந்த படத்தில் இருந்து தக்காளி சீனிவாசன் மாற்றப்பட்டார்.
அவர் டைரக்டு செய்த காட்சிகளை ஒரு ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சில மாற்றங் களுடன் அதே கதை புதிதாக படமாகி வருகிறது. தக்காளி சீனிவாசனுக்கு பதில் புவன கண்ணன் டைரக்டு செய்து வருகிறார்.
பெண்கள் பாலின பலாத்காரம் செய்யப்படுவதை கருவாக கொண்ட கதை இது. இதில், `அம்முவாகிய நான்' படத்தின் கதாநாயகி பாரதி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார். ஒரு டாக்டர் வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் போலீஸ் அதி காரியாக நடிக்கிறார்.
டி.பி.கஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரி பாஸ்கர் தயாரிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இம்மாதம் இறுதியில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
லேபிள்கள்:
சற்றுமுன் கிடைத்த தகவல்,
தக்காளி சீனிவாசன்
வியாழன், 1 ஜனவரி, 2009
நயன்தாராவின் படு கவர்ச்சி நடிப்பில் "துபாய்ராணி".
நடிகை நயன்தாரா பில்லா படத்துக்கு முன்பு தெலுங்கில்தான் படு கவர்ச்சியாக நடித்து வந்தார். தற்போது நயனுக்கு தமிழில் நம்பர் ஒன் இடம் கிடைத்திருப்பதால் அவர் தெலுங்கில் செம கிளாமராக நடித்த 2 படங்களை தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதில் ஒன்று துபாய் சீனு. இந்த படத்தை தமிழில் துபாய் ராணி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியிடவிருக்கிறார்கள்.
படத்தில் நயன்தாராவின் ஜோடியாக நடித்திருப்பவர் ரவி தேஜா. நயன்தாராவின் கவர்ச்சியையே பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்கிறார் துபாய் ராணி படக்குழுவினர்.
அதேபோல நயன்தாராவின் கடு கவர்ச்சி நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கை போடு போட்ட யோகி படமும் தமிழில் முரட்டுத்தம்பி என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
லேபிள்கள்:
துபாய் ராணி,
நயன்தாரா,
முரட்டுத்தம்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)