திங்கள், 29 டிசம்பர், 2008

நீச்சல் உடையில் வந்த நமீதா !.





அஜீத்குமார், நயன்தாரா, நமீதா நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் வெளிவந்த `பில்லா' படம், இப்போது தெலுங்கில் அதே பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை குணசேகர் டைரக்டு செய்கிறார்.

அஜீத்குமார் நடித்த வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். நமீதா நடித்த வேடத்தில் அவரே நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அதையடுத்து விசாகப்பட்டினத்தில் இப்போது படப்பிடிப்பு நடைபெறுகிறது.
நமீதா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அவர் நீச்சல் உடையில் வரும் காட்சிகள் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் படமாக்கப்பட்டன.

நீச்சல் உடையில் நமீதா வருவதை படப்பிடிப்பு குழுவினரே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். நீச்சல் உடையில் அவர் கவர்ச்சியாக நடந்து வருவதையும், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி உட்கார்ந்திருப்பதையும், கண்கொட்டாமல் பார்த்தார்கள்.

இதை கவனித்த நமீதா, படப்பிடிப்பு குழுவினர் வேடிக்கை பார்ப்பதை எப்படி தவிர்க்கலாம்? என்று யோசிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பில் பணிபுரியும் ஆண்கள் தன்னை பார்த்து ரசிக்கவும் கூடாது... அதே சமயம் அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்துகொள்ளக்கூடாது...அதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதன்படி, நீச்சல் உடை அணிந்து கொண்டு காமிராவை நோக்கி அவர் வரும்போதெல்லாம், ``அண்ணா, எல்லோரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்'' என்று தெலுங்கில் தமாசாக சொன்னார். உடனே படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்கள். நமீதாவின் சங்கோஜத்தை புரிந்து கொண்டு அவரை வேடிக்கை பார்ப்பதை தவிர்த்தார்கள்.

நமீதா சம்பந்தப்பட்ட நீச்சல் உடை காட்சிகளை படமாக்கி முடித்தபின், அனுஷ்கா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளை படமாக்க ஆரம்பித்தார்கள்.

படப்பிடிப்பு குழுவினர், ``நமக்கு இன்று டபுள் பேட்டா'' என்று தங்களுக்குள் தமாசாக சொல்லிக்கொண்டார்கள்.

சனி, 27 டிசம்பர், 2008

பிரசாந்த் - மீராஜாஸ்மின் ஜோடியுடன் மீண்டும் மலையூர் மம்பட்டியான்





நடிகர் தியாகராஜன் நடித்து வெற்றி பெற்ற `மலையூர் மம்பட்டியான்' படம், `மம்பட்டியான்' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது.

தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடத்தில், பிரசாந்த் நடிக்கிறார். சரிதா நடித்த வேடத்தில், பிரசாந்த் ஜோடியாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். ஜெயமாலினி நடித்த வேடத்தில், முமைத்கான் நடிக்கிறார். ஜெய்சங்கர் நடித்த டி.எஸ்.பி. ரஞ்சித் வேடத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். `சின்ன பண்ணை சீனாதானா'வாக வடிவேல் நடிக்கிறார்.

போலி மம்பட்டியானாக கலாபவன்மணி நடிக்க, ராஜேஷ், கோட்டா சீனிவாசராவ், விஜய குமார், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, சங்கராபரணம் ராஜலட்சுமி, கலைராணி, `மானாட மயிலாட' புகழ் கணேஷ் ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரனின் மகன் அருண் ராஜேந்திரன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், கலை, டைரக்ஷன் பொறுப்புகளை தியாகராஜன் ஏற்றுள்ளார். லட்சுமி ஷாந்தி மூவீஸ் சார்பில் படத்தை தியாகராஜனே தயாரிக்கிறார்.

அழகிய மலைபிரதேசங்களும், அடர்ந்த காடுகளும் நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

டைரக்டர் ஷங்கர் தயாரிக்கும் புதிய படம், `ஈரம்'


காதல், வெயில், இம்சை அரசன் என மாறுபட்ட கதையம்சங்களை தயாரித்த பட நிறு வனம், டைரக்டர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட கதையம் சம் கொண்ட `ஈரம்' என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது.

இதில், `மிருகம்' பட கதாநாயகன் ஆதி, நந்தா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கி றார்கள். இவர்களுக்கு ஜோடியாக சிந்துமேனன், சரண்யா மோகன் ஆகிய இருவரும் நடிக்க, மற்ற நடிகர்-நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு, படப் பிடிப்பு நடைபெறுகிறது.

முதல்கட்டமாக, அடுக்கு மாடி குடியிருப்பு போன்ற பிரமாண்டமான அரங்கம் அமைக் கப்பட்டு, அதில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இதையடுத்து திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது.

முழுக்க முழுக்க கதை, கதாபாத்திரங்கள், தொழில்நுட்பம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய் கிரார், அறிவழகன். இவர், டைரக்டர் ஷங்கரிடம் `பாய்ஸ்,' `அந்நியன்' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, சிறந்த குறும் படத்தை இயக்கியதற்காக தங்கப்பதக்கம் பெற்றவர்.

இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் திரைக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டு இருக்கி றார்கள்.

வியாழன், 25 டிசம்பர், 2008

காட்பாடியில் `எந்திரன்' படப்பிடிப்பு!. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடித்தனர்




காட்பாடி, டிச.26-

நடிகர் ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு வேலூரை அடுத்த காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படத்தை டைரக்டர் ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்தது.

இந்த படத்தின் சில காட்சிகளை படம் பிடிப்பதற்காக டைரக்டர் ஷங்கர் தலைமையிலான படக்குழுவினர் நேற்று அதிகாலை வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்குள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினர். இதை தொடர்ந்து, நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தும், நடிகை ஐஸ்வர்யாராயும் தனி தனிக்கார்களில் வேலூர் வந்தனர். பின்னர், அவர்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


நேற்று காலை டெக்னாலஜி டவரில் படிப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் ஆகியோர் வேலூர் வருகை தந்துள்ளது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ரஜினியை காண ரசிகர்களும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு விட்டால் படப்பிடிப்புக்கு இடைïறு ஏற்படுவதுடன், போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் வரும் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

செவ்வாய், 23 டிசம்பர், 2008

கிசு கிசு!.,கிசு கிசு!.,கிசு கிசு!.. .





கல்யாணத்தில் இணையும் ஜோடி!

`விஷ்' என்று உச்சத்துக்குப்போன மூன்றெழுத்து கதாநாயகனுக்கும், `நம்பர்-1' நீயா, நானா? என்ற போட்டியில் உள்ள மூன்றெழுத்து நடிகைக்கும் இடையே அரும்பிய காதல் கனிந்து, கல்யாணத்தில் முடியும் நிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கும் படம் திரைக்கு வந்ததும், திருமண பத்திரிகை கொடுக்க இருக்கிறார்களாம்!


`கல்லூரி' நாயகி சம்பளம், ரூ.60 லட்சம்!

`நயன' நடிகை நடிக்க இருந்த படத்தில் `கல்லூரி' நாயகி நடிக்கிறார் அல்லவா? இந்த படத்துக்காக `கல்லூரி' நாயகிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம், ரூ.60 லட்சமாம்! இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அடுத்த படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்க முடிவு செய்து இருக்கிறாராம், `கல்லூரி' நாயகி!


`ராய்' நடிகையின் சினேகிதர்கள்!

`ராய்' நடிகைக்கு `விளையாட்டு' நண்பர் தவிர, இன்னொரு நண்பரும் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர். `ராய்'க்கு விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை பரிசாக கொடுப்பவர், அந்த வெளிநாட்டு நண்பர்தான். சமீபத்தில் அவர் கொடுத்த பரிசு கார்.

ஒரு நடிகையின் காதல் விளையாட்டு!

இளம் டைரக்டர்களின் மனதில் காதல் ஆசையை தூண்டிவிட்டு, பிறகு ஏமாற்றி அவர்களை தாடி வளர்க்க வைத்து பார்த்து ரசிப்பதை, `மோ...கா' என்ற நடிகை பொழுதுபோக்காக வைத்து இருக்கிறார். இவருடைய காதல் விளையாட்டில் சிக்கி, சின்னாபின்னமாகிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதாம்!

திங்கள், 22 டிசம்பர், 2008

"அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுப்பதில் தகராறு" - நடிகை நயன்தாரா-பட அதிபர் மோதல்!.







சென்னை, டிச.23-

`பையா' என்ற படத்தின் அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுப்பது தொடர்பாக நடிகை நயன்தாராவுக்கும்- பட அதிபருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரண்டும் பேரும் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்திருக்கிறார்கள்.


நயன்தாரா - கார்த்தி ஜோடியாக நடிக்க, லிங்குசாமி டைரக்ஷனில் `பையா' என்ற படம் தயாராவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை டைரக்டர் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பதாக இருந்தார்.

இந்த படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. இந்த நிலையில், நயன்தாரா சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பட அதிபர் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், `பையா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.15 லட்சம் `அட்வான்ஸ்' வாங்கியிருந்தார். இப்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை. என்றாலும் அவர் அட்வான்ஸ் தொகையை திருப்பி தரவில்லை. அவரிடமிருந்து அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து நடிகை நயன்தாரா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

`பையா' படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று மாதங்களாக காத்திருந்தேன். அந்த சமயத்தில் பட அதிபர் சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில், சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்று அவர் என்னை `பிளாக்மெயில்' செய்தார்.

நான் மூன்று மாதங்களாக காத்திருந்ததால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் எனக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டது. எனக்கு நஷ்டஈடு கொடுத்தால் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விடுகிறேன்.

இவ்வாறு நயன்தாரா அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த இரண்டு புகார்களின் மீதும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

"காந்தி'' பட டைரக்டர் ஆட்டன்பரோ உடல் நிலை கவலைக்கிடம்!.




லண்டன், டிச.22-

காந்தி பற்றிய படம் எடுத்த டைரக்டர் லார்டு ரிச்சர்டு ஆட்டன்பாரோ, தன் வீட்டில் கடந்த வாரம் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டதால் அவர் சுயநினைவு இழந்தார். அவர் கோமாவில் விழுந்தார். உடனடியாக அவர் தென்மேற்கு லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இவர் கடந்த 1982-ம் ஆண்டு இயக்கிய காந்தி படத்துக்காக சிறந்த படம் மற்றும் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.

அவர் நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். நடிகராகவும், டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். இப்போது அவருக்கு வயது 85 ஆகும்.