ஞாயிறு, 7 டிசம்பர், 2008

மும்பை ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்த நடிகை





மும்பையின் கவர்ச்சி தாரகை ராக்கி சவந்த். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அரைகுறை ஆடையில் சென்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் இவர் அதை பற்றி கண்டு கொள்வதில்லை.
இவர் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். கௌபாணி வகை பேண்ட், டைட்டான சட்டை அணிந்து சென்ற இவரை நேரில் கண்ட இன்ப அதிர்ச்சியில் ஓட்டல் ஊழியர்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ராக்கியை விழுந்து விழுந்து கவனித்துள்ளனர். அப்போது ஒரு ஊழியர் மட்டும் ஆர்வ மிகுதியில் ராக்கியை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதைக்கண்ட ராக்கிசவந்த் அவர் அருகில் சென்று என்னை மட்டும் ஏன் போட்டோ எடுக்கிறீர்கள்? நாம் இருவருமே சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாமே என கூறியதோடு அந்த ஊழியரின் தோளில் தனது கையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம்.
இதைப்பார்த்த மற்ற ஊழியர்கள் ராக்கியிடம் நாங்களும் உங்களுடன் சென்று போட்டோ எடுக்க ஆசைப்படுகிறோம் என கூறியுள்ளனர்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வரிசையாக ஒவவொருவருடன் நின்று தோளில் கை போட்டபடி மட்டுமல்லாமல் கட்டி அணைத்தபடி, முத்தம் கொடுத்தபடி என விதவிதமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்தாராம் ராக்கி.
ஒட்டு மொத்தத்தில் அன்றைய தினம் ஓட்டலுக்கு விருந்துக்கு சென்ற ராக்கி சவந்த் ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி படைத்து கலக்கினாராம்.

கருத்துகள் இல்லை: